Skip to content
Edit Template

HDPV Mantharam

இந்து தர்ம பண்பாடு மற்றும் வழிபாட்டு மன்றம்.

நல்ல விதையை மண்ணில் விதைக்க வேண்டியது நம் கடமை... விதை விருட்ஷமாக .. வருவது எல்லாம் வல்ல இறைவனின் அருளே..

தமிழகம் முழுவதும் ஒவ்வொரு கிராமத்திலும் அங்குள்ள ஆலயத்தில் இந்த மன்றம் தொடங்கபடும்.. நமது இந்து தர்ம புராதணமான பண்பாடுகளையும், ஆலய வழிபாட்டுகளையும்,சாஸ்திர சம்பிரதாயங்களையும்,வாழ்வியியல் நடைமுறைகளையும், தமிழ்நூல் நல்லொழுக்கங்களையும் நம் கிராம மக்களிடம்/ குறிப்பாக குழந்தைகளிடம் கொண்டு சேர்க்கும் விதமாக இந்த மன்றம் செயல்படும்...

ஸ்ரீமஹாபெரியவா அனுக்கிரம் ஸ்ரீஜெயேந்திரபெரியவா அனுக்கிரகம் நம் ஸ்ரீஸ்ரீசங்கர விஜயேந்திர சரஸ்வதி பாலபெரியவா ஆக்னையை ஏற்று நம் நித்தியமும் கைங்கர்யத்தின் சார்பாக திருச்சியில் குருபுரம் அமைக்க இருக்கிறோம்.. அதன் முதல் தொடர்சியாக ஒவ்வொரு கிராமத்திலும் குழந்தைகளுக்கு ஆன்மிக கல்வியையும்,ஹிந்து தர்ம-அறிவியல் உண்மைகளையும், ஆலய வழிபாட்டின் முக்கியதுவத்தையும் அனைவரின் மனதிலும் புகற்றிட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் ஒவ்வொரு கிராமத்திலும் துவங்க இருக்கிறதே... "இந்து தர்ம பண்பாடு & வழிபாட்டு மன்றம்"

“நாம் இந்தியர்கள், நாம் இந்துக்கள்” என்ற ஒற்றுமை உணர்வை வளர்த்தல். சனாதன தர்மம், ஆலயங்கள், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு பாதுகாத்து வழங்குதல். ஆச்சார்யர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள் மற்றும் முன்னோர்கள் காத்த தர்மத்தை தொடர்ச்சியாக பேணுதல். அனைவரும் இந்து தர்ம பண்பாடு & வழிபாட்டு மன்றத்தில் இணைந்து சேவை செய்ய ஊக்குவித்தல் ஆகியவையே நம் மன்றத்தின் முக்கிய நோக்கம்.