Skip to content
Edit Template

தெய்வத்தின் குரல் ( முதல் பாகம் )

அன்பும் அருளும்

குடும்பத்தில் ஏதாவது பிரச்சனைகள் எழுமானால் குடும்பத்தின் தலைவன் முயன்று அந்தக் குடும்பத்தில் நிம்மதி நிலவச் செய்வதைப் பார்க்கிறோம். நாட்டில் அரசியல் பிரச்சனைகளோ கொந்தளிப்போ எழுமானால் நாட்டுத் தலைவர்களும் அரசாங்கமும் தலையிட்டு அதனை அடக்குவதைக் காண்கிறோம். யுகதர்மம் சீர்குலைந்து உலகத்துக்கே உபாதை ஏற்படின் யார் தீர்த்து வைக்க முடியும்.

தெய்வத்தினால் மட்டுமே அது இயலும். தெய்வம்தான் மனித வடிவமெடுத்து நாயன்மாராகி உலகத் துன்பங்களைத் தீர்க்க முடியும்.

இன்று அவதார புருஷராக – நாயன்மாராக – உலக குருவாக ஒளிரும் ஸ்ரீ பெரியவர்கள் தாம் குடும்பத்துக்கும், நாட்டுக்கும், உலகுக்கும் ஏற்படும் சந்தேகங்களுக்கு சங்கடங்களுக்கு மார்க்கம் சொல்ல வல்லவர்களாக, துன்பத்தைப் போக்க வல்லவர்களாகத் திகழ்கிறார்கள்.

பெரியவர்களிடம் போனால் நம் இன்னல்கள் இன்பமயமாகின்றன. மனதுக்கு மகிழ்ச்சி கிடைக்கின்றது. அந்த தெய்வ சன்னிதானத்தின் முன் நின்றால் ஒரு சாந்தி கிடைக்கின்றது. குளிர் பூந்தென்றல் நம் மேனியில் படுவது போன்ற உணர்ச்சி ஏற்படுகிறது. வாழ்க்கையில் ஒரு துணிவு, தெம்பு, தன்னம்பிக்கை ஏற்படுகிறது. இவை அவர்கள் பால் முழு ஈடுபாடு கொண்டவர்கள் தினசரி உணரும் உண்மை.
(கடவுளிடமும் பெரியவர்களிடமும் முழுப் பக்தி கொண்டவர்கள் மட்டுமே அந்தச் சன்னிதானத்தின் முன்பு இத்தகைய அனுபவத்தைப் பெற முடியும்.)

பெரியவர்கள் உலக மக்களிடம் மிகுந்த அன்பு கொண்டவர்கள். தம்மை அடக்கிக் கொண்டு, தம்மைச் சுருக்கிக் கொண்டு, தம்மை உருக்கிக் கொண்டு உலக மக்களின் துயர்களை எல்லாம் அடக்குபவர்கள்; துன்பத்தைத் துரத்துபவர்கள். உலக மக்களின் நன்மைக்காகவே நாழிகை தோறும் பூஜை செய்பவர்கள்.

அவர்கள் செய்த தவமும், செய்து கொண்டிருக்கிற பேரருளும், பேணிக் காக்கும் பேரறமும் இந்த உலகத்தை வளப்படுத்திக் கொண்டிருப்பதை கண்கூடாகக் காணலாம்.

பெரியவர்கள் பல்துறை அறிவும் பல்கலைச் செறிவும் பெற்றவர்கள். அவர்கள் நடமாடும் தெய்வம் மட்டுமல்ல; நடமாடும் பல்கலைக் கழகமும்கூட. அந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து மக்கள் நல் அறிவு பெற, நாடு நலம் பெற, உலகம் உய்வு பெற, எத்தனையோ அறிவு மொழிகள் அறிவு உறை வடிவில் வந்துள்ளன.

மனித வாழ்வை வளப்படுத்தவும், புனிதப்படுத்தவும் அவர்கள் வேதங்களிலிருந்தும், இதிகாச புராண சாஸ்திரங்களிலிருந்தும் மேற்கோள்கள் காட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் உரையாற்றியிருக்கிறார்கள். அவ்வப்போது எழுந்த குரல் காற்றோடு கலந்து போகாமல், என்றும் நிலைத்து நிற்கும் வண்ணம் தெய்வத்தின் குரலாகி, அச்சு ஏட்டில் பதிவாகி, சிறந்த நூலாக இப்போது வடிவெடுத்துள்ளது.

ஆசாரிய சுவாமிகளின் அன்பு மொழிகளில் அருள் கனிகிறது. புராணங்களையோ, இதிகாசங்களையோ, வேதங்களையோ, தர்ம சாஸ்திரங்களையோ அனைவராலும் முழுதும் படிக்க முடியாது. பெரியவர்கள் அவற்றை எல்லாம் முழுதும் படித்து நமக்குச் சாறு பிழிந்து தருவது போல இந்நூலில் வழங்கியுள்ளார்கள். அத்தனையும் அருட்கனிச் சாறுகள்.

இந்து மதத்தின் பெருமையும், நமது பண்பாட்டின் அருமையும், கடவுளின் வடிவங்களையும், வேத சாரங்களையும், வாழ்வியலின் இலக்கணங்களையும், சகல துறை சாஸ்திரங்களையும், தத்துவ உண்மைகளையும் பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் இதில் காணலாம்.

மொத்தத்தில் இது ஒரு அருட்பெரும் அறிவுக் களஞ்சியம். இதைப் படித்தால் பாமரன் பண்டிதனாகலாம்; அறிஞர் பேரறிஞனாகலாம்; மனிதன் தெய்வமாகலாம்.

இந்த தெய்வத்தின் குரலை, பல டேப்புகளிலிருந்தும், கல்கி பத்திரிக்கையின் அருள் வாக்குகளிலிருந்தும், பல்வேறு ஸ்ரீ முகங்களிலிருந்தும், பல்வேறு சமயங்களில் பெரியவர்கள் ஆற்றிய உரைகளிலிருந்தும் தொகுத்து எழுதியவர் — காஞ்சிப் பெரியவர்களின் அன்பையும் ஆசீர்வாதத்தையும் பெற்ற ஆசிரியர் திரு. ரா. கணபதி அவர்கள்.


📑 பொருளடக்கம் 

மங்களாரம்பம்
விநாயகர்
தத்துவ மயமான விநாயகர்
அத்வைதம்
ஸ்வாமி நாமா? இல்லை என்றால்?

அத்வைதம்
அதுவேதான் இது!
ஸ்வாமி எதற்கு? அத்வைதம் அமைதிக்கே.
அத்வைதமும் அணு விஞ்ஞானமும்
அழுக்கு நீங்க வழி
கண்ணமும் அகண்டமும்
நிறைந்த ஆனந்தம்
கண்ணன் சொன்னான், கம்பனும் சொன்னான்
ஆனந்தம் எங்கே
எதிர்கொண்டு அழைப்பான்?

மாயை
அகமும் புறமும்
துக்கச் சுமை குறைய வழி
யோகி
துக்க பரிகாரம்
த்வைதம் /. பௌத்தம் = அத்வைதம்

மதம் & தர்மம்
ஆசார்யர்களின் ஆக்ஞை
மதம்
தர்மமே தலைக்காக்கும்
பாப புண்ணியங்கள்
மதத்தின் பயன்
மனிதனும் மிருகமும்
சகல மதங்களுக்கும் பொதுவான பக்தி
மதங்களின் ஒற்றுமை
மதபோதகரின் யோக்கியதாம்சங்கள்

பண்பாடு & பக்தி
பண்பாட்டின் இதயஸ்தானம்
இசை வழியே ஈஸ்வர அனுபவம்
வாக்கின் பயன்
எழுத்தாளர் கடமை
கர்ம யோகம்
பக்தி
இஷ்ட தேவதை
தேவதாமூர்த்திகள்

அம்பாள் & தேவர்கள்
காமாக்ஷி
மஹாலக்ஷ்மி
நவராத்திரி
அன்னபூர்ணி
ஸரஸ்வதி
சிவராத்ரி
ஸ்ரீராம நவமி
கண்ணன்
ஐயப்பன்
அநுமார் அநுக்கிரஹிப்பார்